Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை: இங்கிலாந்து அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (12:32 IST)
இந்தியா உள்பட பல நாடுகளில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என இங்கிலாந்து அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 சீனாவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் உலகில் உள்ள பல நாடுகளில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில் இங்கிலாந்து வரும் சீன பயணிகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை தேவையில்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது
 
இங்கிலாந்து வரும் சீன பயணிகள் தாங்களாகவே பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் பரிசோதனை கொரோனா உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் தனிமை படுத்த மாட்டார்கள் என்றும் இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments