Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிதத்தை திரும்ப அனுப்பும் எடப்பாடியார்! தேர்தல் ஆணையத்திற்கு ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (12:30 IST)
தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பும் கடிதங்களை அதிமுக திரும்ப அனுப்பி வருவதால் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து முரண்பாடு நிலவிய நிலையில் கடந்த ஆண்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதோடு, எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் அதிமுகவின் இந்த தீர்மானம் தேர்தல் ஆணையத்தால் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதனால் அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அனுப்பும் கடிதங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பெயர்கள் குறிப்பிட்டே வருகின்றன. இதனால் அந்த கடிதங்களை அதிமுக திருப்பி அனுப்பி வருகிறது.

2 முறை கடிதம் அனுப்பியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பியதால் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments