Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (13:02 IST)
பப்புவா நியூ கினியாவில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூபிரிட்டன் தீவில் இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் குழுங்கின. இதனால் மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
 
இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பசபிக் கடல் பகுதியை ஒட்டி சுமார் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரையில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்க கூடும் என பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments