Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவிலிருந்து வந்த மீன்களில் கொரோனா தொற்று! – தடை விதித்த சீனா!

Advertiesment
World
, புதன், 18 நவம்பர் 2020 (08:11 IST)
இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாகியும் கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் மெல்ல கொரோனாவிலிருந்து மீள தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில மீன்களை மாதிரிக்காக சோதித்த சீன சுங்க துறை அதிகாரிகள் அந்த மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதியை சீனா ஒரு வார காலம் தடை செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சுமி விலாஸ் வங்கிக்கு திடீர் கட்டுப்பாடு: ஏடிஎமை நோக்கி ஓடிய வாடிக்கையாளர்கள்!