Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு மருந்து வெற்றி! – சீனா அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (16:21 IST)
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சீனா மருந்து சோதனையில் வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் ஊரடங்கு பல நாடுகளில் அமலில் உள்ளதால் பொருளாதாரமும் சரிவை சந்தித்துள்ளது. உலக நாடுகள் பல கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டறிய தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. Ad5 – nCov என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை சீனாவில் உள்ள 108 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்ததில் அது வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது, இந்த மருந்து சார்ஸ் வைரஸுக்கும் மருந்தாக பயன்படக்கூடியது என கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 501 பேருக்கு இந்த மருந்தை பரிசோதிக்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த கண்டுபிடிப்பு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிநீர் பாட்டில்களில் ரசாயனம்.. தரமற்ற குடிநீர் விற்பனை! - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments