சீன சுரங்கத்தில் புகுந்த வெள்ளம் – குகைக்குள் சிக்கிய தொழிலாளர்கள்

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (10:00 IST)
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஊழியர்கள் குகைகளுக்கு சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள காங்சியான் கவுண்டி பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள பராங் நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென குகைகளுக்குள் நீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் வெளியே செல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர மேலும் 14 ஊழியர்கள் வெள்ளம் சூழ்ந்த குகைகளுக்குள் சிக்கி கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்க 200க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம் தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் குழு குகைகளுக்குள் சிக்கி கொண்டதும் அவர்களை ஒரு வாரம் கழித்து உயிருடன் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments