Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.141 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் !

ரூ.141 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் !
, வெள்ளி, 13 டிசம்பர் 2019 (15:53 IST)
சவுதி அரேபிய நாட்டின் அரசு நிறுவனமான சவூதி அராம்கோ 'soudi aramco ' என்ற நிறுவனம் உலக அளவில் ரூ. 141 லட்சம் கோடி ரூபாய்( இந்திய மதிப்பின் படி ) சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் என்ற சாதனை படைத்துள்ளது.
சவூதி அரேபியாவின் அரசு நிறுவனமான சவூதி அராம்கோ பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
 
சமீப காலமாக இதன் பங்குகளின் சந்தை மதிப்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து உச்சம் பெற்று 8 %, இன்று அதைவிட 10 5 உயர்ந்ததால், அதன் மொத்த சந்தை மதிப்பு 2 லட்சம் டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட  உலகில் முதல் நிறுவனம் என்ற சாதனையைப்  படைத்துள்ளது.
 
மேலும், உலக  அளவில் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனம் தானிதுவரை 1.19 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட நிறுவனமாக இருந்த நிலையில், தற்போது,இந்த இரண்டு நாட்களில் அராம்கோ நிறுவனத்திம் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால் உலகில் பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.
 
மேலும், இந்த நிறுவனத்தை ஒரு நாடாக கணக்கிட்டால் இது ’ஜிடிபி’ உலகில் ஒட்டு மொத்த அளவில் உலகில் 8 வது பெரிய நாடாக விளங்கும் என கருதப்படுகிறது.
 
சீனா நாட்டைச் சேர்ந்த ’அலிபாபா குழுமம்’தான் கடந்த 2014 ஆம் ஆண்டில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையையும் ’சவுதி அராம்கோ’ முறியடித்துள்ளது. எனவே தற்போதைய அராம்கோ நிறுவனம் 25.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக vs காங்கிரஸ்: உள்ளாட்சி தேர்தல் சீட்டு பஞ்சாயத்து..!!