Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அரசியல் கட்சிகளுக்கும் வேலை செய்தோம்: ஒப்புக்கொண்டது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (19:14 IST)
இங்கிலாந்து நாட்டின் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஒரு செயலி மூலம் ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திரட்டி டிரம்ப் ஆதரவாளர்களுக்கு அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவை தன்னுடைய தளத்தில் இருந்து நீக்கிய பேஸ்புக், இதற்காக மன்னிப்பு கேட்டதோடு இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டுமின்றி இந்தியாவில் நடந்த தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுகுறித்து இந்திய பத்திரிகையாளர்கள் பலரின்  கேள்விகளுக்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் விசில் ப்ளோவர்’ கிறிஸ்டோபர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர்தனது டுவிட்டரில் ஆம், இந்திய அரசியல் கட்சிகளுக்காகவும் நாங்கள் வேலை செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கும் வேலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இன்னும் ஒருசில கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக கூறவில்லை என்றும் அவ்வாறு கூறினால் பெரும் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments