ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பின்னர் ஃபேஸ்புக் இந்தியாவில் இருக்குமா? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (18:55 IST)
சமிபத்தில் தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கி கொண்ட ஃபேஸ்புக், பங்குகளின் வீழ்ச்சி காரணமாக பல ஆயிரம் கோடி டாலர்களை இழந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தகவல்திருட்டு நடந்ததை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டதோடு, இனிமேல் இதுபோன்ற நிகழ்வு இருக்காது என்றும் உறுதியளித்தது.

இருப்பினும் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் இது என்று பல முக்கிய பிரமுகர்கள் கூறி வருவதோடு ஒருசிலர் ஃபேஸ்புக்கின் கணக்கை முடித்து கொண்டனர். இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் ஃபேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடவுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தின. இதுகுறித்து மத்திய அரசு ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது

இந்த நிலையில் தகவல் திருட்டு தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையிலான விளக்கம் வரவில்லை என்றால் ஃபேஸ்புக்கை இந்தியாவில் தடைசெய்யவும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments