ஆண்டிபாடிகளை பெருக்கும் பூஸ்டர்... ஒமிக்ரானுக்கு இதுதான் தீர்வா..?

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (11:11 IST)
ஆண்டிபாடிகளை உடலில் பெருக்கும் ஆற்றல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய மாறுபட்ட கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பல ஒமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதோடு பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் என தெரிவித்தது. 
 
இதனிடையே பைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் ஒமிக்ரான் பரவலுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உடலில் பெருக்கும் ஆற்றல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி மற்ற வேரியண்ட்களுக்கு எதிராக செயல்பட கூடிய வகையாகவும் மூன்றாவது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படும் என ஆண்டிபாடிகளை பெருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் தம்பி.. சின்ன தம்பி.. அவர் ஒரு ஜீரோ!.. தமிழிசை சவுந்தரராஜன் நக்கல்..

காருக்கு வரி கட்டாதவர் ஊழல் பத்தி பேசுகிறார்!. விஜயை பொளக்கும் கருணாஸ்!...

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.4 லட்சத்தை நெருங்கியது வெள்ளி விலை..!

விஜய் கட்சியில் காளியம்மாள்? இன்னும் சில பிரபலங்கள்.. சூடு பிடிக்குது தேர்தல் களம்..!

துணிஞ்சு முடிவெடுங்க ராகுல் காந்தி? 25 தொகுதி வாங்கி 18 தொகுதி ஜெயிச்சு என்ன பயன்? காங்கிரஸ் தொண்டர்கள் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments