Publish Date: Thu, 09 Dec 2021 (08:51 IST)
Updated Date: Thu, 09 Dec 2021 (08:53 IST)
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மட்டும் அலுவலகத்திற்கு வந்து ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இங்கிலாந்து நாட்டில் மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறை அமல்படுத்தப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது
ஒரு சில முக்கிய ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வருவார்கள் என்றும் மற்ற ஊழியர்கள் வீட்டிலிருந்து வழி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது
மேலும் இங்கிலாந்து நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் செலுத்த அந்நாட்டின் சுகாதாரத் துறை திட்டமிட்டிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Mahendran
Publish Date: Thu, 09 Dec 2021 (08:51 IST)
Updated Date: Thu, 09 Dec 2021 (08:53 IST)