Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படை தளபதி பிபின் ராவத்தின் புகைப்படம்! – தமிழக ஆளுனர் அஞ்சலி!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (11:01 IST)
இந்தியாவின் முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது படத்திற்கு தமிழக ஆளுனர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பிறநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது பூத உடல் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments