Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலனளிக்காத கோவுட் ஷீல்ட்; தயாரிப்பில் குழப்பம்! – அஸ்ட்ரா ஜெனிகா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (10:25 IST)
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு இணைந்து தயாரித்த கோவிட்ஷீல்டு தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டது. இந்த தடுப்பூசியை தன்னார்வலர்களிடம் சோதித்ததில் பக்க விளைவுகள் ஏற்பட்டதால் உடனடியாக பரிசோதனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி பரிசோதனையை தன்னார்வலர்களிடம் நடத்திய நிலையில் 1 டோஸ் கொடுக்கப்பட்டவர்கள் 90 சதவீதம் குணமடைந்துள்ளதும், 2 டோஸ் கொடுக்கப்பட்டவர்கள் 62 சதவீதம் குணமானதும் தெரிய வந்துள்ளது. இதனால் மருந்து தயாரிப்பில் ஏதோ குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என அஸ்ட்ரா ஜெனிகா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments