Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் குவியும் கூட்டம்: அனுமதி எண்ணிக்கை அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (09:43 IST)
சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைய பக்தர்கள் குவிவதால் அனுமதி எண்ணிக்கையை அதிகரிப்பதாக தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் மலைக்கு மாலைபோட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னதாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், அவர்களும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரால் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும், மாலை போட்டும் மலைக்கு போக முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒருநாளைக்கு 1000 பேர் என்பது தேவசம்போர்டு வருமானத்தையும் வெகுவாக குறைத்திருப்பதால் இனி நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments