Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம்: ஆங் சான் சூகி சிறைபிடிப்பு

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (07:54 IST)
மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம்
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆங் சாங் சூகி சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் கடந்த சில மாதங்களாக அரசியல் சூழ்நிலை பதட்டமாக இருந்த நிலையில் தற்போது திடீரென ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ராணுவம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து அந்நாட்டின் அதிகார தலைவராக இருந்து வரும் ஆங் சான் சூகி என்பவர் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி மியான்மர் நாட்டின் முக்கிய தலைவர்களும் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது
 
மியான்மர் நாட்டின் நடைபெறும் அரசியல் சூழல் குறித்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments