Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரப்பர் தோட்டத்தில் பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (23:18 IST)
இந்தோனேஷியா நாட்டில், ஜாம்பி என்ற  பகுதியில் வசித்து வந்தவர் ஜஹ்ரா(52). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அங்குள்ள பிரபலமான ஒரு ரப்பர் தோட்டத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார்.

அன்று மாலை அவர் பணி முடிந்து வீட்டிற்குச் செல்லவில்ல்லை என்பதால்  உறவினர்கள் இதுகுறித்து தோட்டத்திற்கு வந்து கேட்டும், உறவினர்கள் வீட்டுகளிலும் விசாரித்து, தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்,  ரப்பர் தோட்டத்திற்கு அருகில் ஒரு 16 அடி நீளம் மலைப்பாம்பு உடல் பருமனுடன் எதோயோ விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. ஒருவேளை பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் அடைந்த உறவினர்கள், அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர்.

அதற்குள், ஜஹ்ரா பிணமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் அந்த நாட்டில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 Edited by Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments