சீனாவில் பரவும் புதுவித வைரஸ்.. உலக சுகாதார மையம் கண்காணிப்பு..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:51 IST)
சீனாவில் புதுவிதமான வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சீனாவை கண்காணித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
சீனாவில் புதுவித வைரஸ் காரணமாக மக்களுக்கு காய்ச்சல் வருவதாக கூறப்பட்டாலும் சீன அரசு அதை நிமோனியா காய்ச்சல் என்று கூறி வருகிறது.  
 
புதுவித வைரஸ் எதுவும் பரவவில்லை என்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாகத்தான் ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனா, உலக சுகாதார மையத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
 
 இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் சீனாவில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் உலக சுகாதாரமய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால் அதே நேரத்தில் சீனாவுக்கு செல்வோருக்கு எந்தவிதமான விதிமுறைகளையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் இந்த புது வைரஸும் உலகம் முழுவதும் பரவுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments