Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 662 பேர் பலி: இத்தாலியில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:32 IST)
இத்தாலியில் கோரத்தாண்டவமாடும் கொரோனா
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவைவிட அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் தான் மிக மோசமாக தாக்கி வருகிறது. அமெரிக்கா ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தை பிடித்துவிட்ட நிலையில் இத்தாலியிலும் இந்த வைரசால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 662 பேர் கொரோனாவைரசால் பலியாகி உள்ளதாகவும், கொரோனாவால் இறந்தவர்களை தனித்தனியாக புதைக்க இடமில்லாமல் கொத்துக்கொத்தாக பிணங்களை பெரிய குழிகளில் போட்டு மொத்தமாக புதைத்து வருவதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன
 
இத்தாலியில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் சுமார் 8000 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், கோரத்தாண்டவமாடும் கொரோனா வைரசால் இத்தாலி நாடே சுடுகாடாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலை எந்த நாட்டிற்கும் வரக்கூடாது என்றால் பொதுமக்களும் அரசும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments