Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 மீனவர்கள் விடுதலை..! 3 மீனவர்களுக்கு சிறை..! உறவினர்கள் கொந்தளிப்பு..!!

Senthil Velan
புதன், 27 மார்ச் 2024 (15:02 IST)
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.  மேலும் மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.
 
காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 15 மற்றும் 17ம் தேதி ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்துள்ளனர்.
 
அப்போது 3 படகுகள் மற்றும் 33 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 36 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 33 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ALSO READ: விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு..! வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிய மனு தள்ளுபடி.!

படகோட்டி இருவருக்கு 6 மாத சிறை தண்டனையும், 2வது முறையாக மீன்பிடித்த குற்றத்திற்கு மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளனர். இந்த சம்பவம் காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments