Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவில் மர்ம காய்ச்சல்: 21 பேர் பலி!

Webdunia
சனி, 14 மே 2022 (13:00 IST)
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல். 

 
வட கொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மர்மமாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. 
 
சமீபத்தில் வடகொரியாவில் முதல் முதலாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். இந்த நிலையில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகி உள்ளதாக வெளிவந்த தகவலால் வடகொரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அந்நாட்டில் ஏப்ரல் இறுதி வரையில், மர்ம காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது என வடகொரியா தெரிவித்து உள்ளது.  இதற்கு 3,50,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments