சுவையான பன்னீர் சமோசா செய்ய !!

Webdunia
திங்கள், 30 மே 2022 (13:57 IST)
தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
பன்னீர் - 50 கிராம்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
சாட் மசாலா, உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப



செய்முறை:

மைதா மாவுடன் உப்பு, நெய் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பன்னீரை துருவி அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரியாகத் திரட்டி மத்தியில் சிறிது பன்னீர் மசாலாவை வைத்து சமோசா வடிவத்தில் மடக்கி ஓரங்களில் சிறிது தண்ணீர் கொண்டு ஒட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த பன்னீர் சமோசா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் எவை எவை?

ஓவர் மேக்கப்பால் சருமத்திற்கு பிரச்சனையா? இதை செய்தால் போதும்..!

பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

நெற்றியில் சுருக்கங்கள் இருக்கிறதா? எப்படி மறைய வைப்பது?

அடுத்த கட்டுரையில்
Show comments