Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றதா...?

Sathukudi juice
Webdunia
திங்கள், 30 மே 2022 (13:11 IST)
சாத்துக்குடி எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியது. அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்த சாத்துக்குடி உதவுகிறது.


சாத்துக்குடி அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும். சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பொதுவாக சளி பிடித்திருக்கும் போது எந்த ஜூஸையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், இதில் உள்ள வைட்டமின் சி உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

சாத்துக்குடியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமான அளவில் இருப்பதால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments