Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் 2018-19 - 8 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:35 IST)
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர்  அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அப்போது உரையாற்றி அவர் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவாகும். சராசரியாக 3 ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியை எட்டியுள்ளோம் என தெரிவித்தார்.  அதன் பின் அறிவிவித்த சலுகைகள் ஆவது:
 
விவசாய உள்கட்டமைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு 
 
2018-2019 ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு ரூ.11 கோடியாக உயர்த்தப்படும்.
 
விவசாயிகளுக்கான கிஸான் கார்டு மின்வளம் மற்றும் கால்நடை துறைகளும் விரிவுபடுத்தப்படும்.
 
மீன்வளம் மற்றும் கால்நடைதுறைகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மூங்கில் மரம் வளர்ப்புக்கு ரூ.1,029 ஒதுக்கீடு
 
இந்தியாவின் நேரடி மானியத் திட்டம் உலக அளவில் பேசப்படுகிறது. 8 கோடி ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
 
மகளிர் உதவிக்குழுக்கு 75 ஆயிரம் கோடி மற்றும் 8 கோடி ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments