Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் 2018-19 - 8 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:35 IST)
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர்  அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அப்போது உரையாற்றி அவர் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவாகும். சராசரியாக 3 ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியை எட்டியுள்ளோம் என தெரிவித்தார்.  அதன் பின் அறிவிவித்த சலுகைகள் ஆவது:
 
விவசாய உள்கட்டமைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு 
 
2018-2019 ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு ரூ.11 கோடியாக உயர்த்தப்படும்.
 
விவசாயிகளுக்கான கிஸான் கார்டு மின்வளம் மற்றும் கால்நடை துறைகளும் விரிவுபடுத்தப்படும்.
 
மீன்வளம் மற்றும் கால்நடைதுறைகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மூங்கில் மரம் வளர்ப்புக்கு ரூ.1,029 ஒதுக்கீடு
 
இந்தியாவின் நேரடி மானியத் திட்டம் உலக அளவில் பேசப்படுகிறது. 8 கோடி ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
 
மகளிர் உதவிக்குழுக்கு 75 ஆயிரம் கோடி மற்றும் 8 கோடி ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments