Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுகாலம், எமகண்டத்தில் பிறக்கும் குழந்தைகள் பற்றி?

ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்

Advertiesment
ராகுகாலம்
, வியாழன், 31 ஜனவரி 2008 (17:25 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

ராகுகாலம், எமகண்டத்தில் பிறப்பது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கும். படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். யார் எதைச் சொன்னாலும் அதை எக்காரணத்திற்காகவும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

அதிகமாக சிந்திப்பார்கள். எப்போதும் ஒரு சிந்தனையில் இருப்பார்கள். மேலும், எமகண்டத்தை விட ராகு காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக சிந்தனையுடையவைகளாக விளங்குகின்றன. விளையாட்டிலும் சிறப்பாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் நண்பர்களால் கெடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. எதிர்காலத்தில் மது, மாது, சூது போன்றவைகளுக்கு அடிமையாக வாய்ப்பு உண்டு. அந்த வகையில் மட்டும்தான் ராகு காலம், எமகண்டத்திலும் பிறக்கும் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமே தவிர, மற்றப் பிள்ளைகளை விட ராகுகாலம், எமகண்டத்தில் பிறக்கும் பிள்ளைகள் எல்லா விதத்திலும் சிறப்பாகவே இருப்பார்கள்.

படிப்பிலும், விளையாட்டிலும் மற்றவர்களை விட சிறந்த மாணவர்களாகவே திகழ்வார்கள்.

ஏதாவது ஒரு கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. அதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil