Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராதிகா நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சி ! ஒரு கோடி வென்ற மாற்றுத்திறனாளி !

Advertiesment
சரத்குமார்
கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் யாருமே இதுவரை முழுப் போட்டியையும் நிறைவு செய்து பரிசு பெறவில்லை. இந்நிலையில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் முதல் முறையாக 15 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார்.

காது கேட்காத வாய் பேசாத முடியாத கௌசல்யா என்ற அந்த பெண் அசைவுகளின் மூலமே அனைத்துக் கேள்விகளும் சரியான பதிலளித்தார். கௌசல்யா நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருவாகிறது நெற்றிக்கண் படத்தின் இரண்டாம் பாகம் ! யார் கதாநாயகன் தெரியுமா ?