Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் இட்லி கடை படத்தில் பார்த்திபனும் இருக்கிறாரா?... அவரே பகிர்ந்த தகவல்!

Advertiesment
தனுஷின் இட்லி கடை படத்தில் பார்த்திபனும் இருக்கிறாரா?... அவரே பகிர்ந்த தகவல்!

vinoth

, வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (14:26 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து பிப்ரவரி 21 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இன்னும் சிலக் காட்சிகள் மட்டும் பாங்காங்கில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலயில் இந்த படத்தில் தான் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்கு இயக்குனர்களின் படங்கள் வந்தால்தான் சந்தோஷமாக இருக்கும் – இளையராஜா பகிர்ந்த தகவல்!