Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் படத்துக்கு வசனம் எழுதுவது யார் தெரியுமா?

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (10:23 IST)
கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘2.0’ படத்துக்கு வசனம் எழுதப்போவது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது.
‘விஸ்வரூபம் 2’ படத்தை இயக்கி முடித்துள்ள கமல்ஹாசன், விரைவில் அதை வெளியிடுவதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அவர் இயக்கி, நடிக்கும்  ‘சபாஷ் நாயுடு’ படம் வேறு பாதியில் நிற்கிறது. அடுத்து அந்தப் படத்தை முடிப்பாரா அல்லது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கப்  போய்விடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
 
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்துக்கு வசனம் எழுதப்போவது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் தான் அவர். சுஜாதா உயிருடன் இருந்தவரை, அவர்தான் ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதுவார். அவர் இறந்துவிட்டதால் ஜெயமோகனைப் பயன்படுத்தி வருகிறார் ஷங்கர்.
 
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்துக்கும் ஜெயமோகன் தான் வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்  நடிக்கும் ‘தளபதி 62’ படத்துக்கும் அவர்தான் வசனம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments