Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கதையேக் கேட்காமல் ‘கூலி’ படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன் – உபேந்திரா சொன்ன காரணம்!

Advertiesment
கதையேக் கேட்காமல் ‘கூலி’ படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன் – உபேந்திரா சொன்ன காரணம்!

vinoth

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (08:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம்  ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கூலி படத்தில் ரஜினிகாந்தோடு இணைந்து நடிப்பது பற்றி பேசியுள்ள உபேந்திரா “லோகேஷ் என்னிடம் ஒருவரிக் கதையை சொன்னார். ஆனால் நான் அதெல்லாம் வேண்டாம். நான் என்னுடைய முன்னோடியான ரஜினிகாந்தோடு படத்தில் இருந்தால் போதுமென்று சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் வெளியானது பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்!