Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட்டில் கர்ணனாக நடிக்கப்போகும் சூர்யா - மகாபாரத கதையில் ஒப்பந்தம்!

பாலிவுட்டில் கர்ணனாக நடிக்கப்போகும் சூர்யா - மகாபாரத கதையில் ஒப்பந்தம்!
, செவ்வாய், 13 ஜூன் 2023 (19:02 IST)
நடிகர் சூர்யா தற்போது பிறந்து வளர்ந்த ஆளான சொந்த ஊரைவிட்டுவிட்டு மனைவி ஜோதிகாவின் பேச்சை நம்பி மும்பையில் தனிக்குடித்தனம் சென்று செட்டில் ஆகிவிட்டார். முதலில் அங்கு புதிய பிசினஸ் ஆரம்பித்து லாபம் பார்த்த சூர்யா பின்னர் வீடு ஒன்றை வாங்கினார். 
 
அதையடுத்து குடும்பத்தோடு செட்டில் ஆக,  தற்போது ரூ. 68 கோடியில் பிரம்மாண்ட பிளாட் ஒன்றை வங்கியுள்ளாராம். 9,000 சதுர அடி கொண்ட அந்த பிளாட்டில்  கார்டன் மட்டும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.  மனைவி ஜோதிகாவின் சொந்த ஊர் மும்பை என்பதால் அங்கு உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க திட்டமிட்டு சூர்யாவை அழைத்து சென்று செட்டில் ஆகிவிட்டதக செய்திகள் வெளியானது. 
 
மேலும் ஜோதிகா, சூர்யா இருவருமே இந்தி திரைப்படங்களில் நடிக்க உள்ளனர். அதற்கான வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தி படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியால் தள்ளிப்போகும் சூர்யாவின் மெகா படம்!