Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்த்துவிட்டவரிடமே வேலையைக் காட்டிய ஆதி – அதிரடி முடிவெடுத்த இயக்குனர்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (08:20 IST)
இயக்குனர் சுந்தர் சி தன் ஊர் காரர் என்பதால் ஹிப்ஹாப் ஆதிக்கு தன் படங்களில் அதிக வாய்ப்புகள் கொடுத்துவந்தார்.

சுந்தர் சி எப்போதும் ஒரு இசையமைப்பாளர் செட் ஆகிவிட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார். சிற்பி, யுவன் ஷங்கர் ராஜா, இமான் என அந்த வரிசையில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதியோடு பல படங்களில் பணிபுரிந்தார். அதோடு நிற்காமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார்.

இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது சுந்தர் சிக்கும் ஆதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அடுத்ததாக இயக்க இருக்கும் அரண்மனை 3 படத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியைத் தூக்கிவிட்டு சத்யாவை இசையமைப்பாளராக பணியமர்த்தினார். மேலும் தான் தயாரிக்க இருக்கும் மாயா பஜார் படத்திலும் ஹிப் ஹாப் ஆதிக்கு வேலை கொடுக்கவில்லையாம்.

இதற்கெல்லாம் காரணம் ஆதி நான் சிரித்தால் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து பட்ஜெட்டை எகிற வைத்ததுதானாம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments