Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது போலீஸில் புகார் !

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (13:51 IST)
இயக்குநர் விக்னேஷ் சிவன்  மீது அவரது உறவினர்கள்  திருச்சி லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளனர்.
 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்  போடா போடி,    நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதுதவிர, நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி உள்ளிட்ட பட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், நடிகை நயன்தாராவை  பல ஆண்டுகளாகக் காதலித்து  நிலைய்ய்ல், கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், இயக்குநர்   விக்னேஷ் சிவன் மீது அவரது உறவினர்களான அவரது பெரியப்பா மாணிக்கம், கோவையில் வசித்து வரும் குஞ்சிதபாதம் மற்றும் அவரது மனைவி  சரோஜா  ஆகியோர்  திருச்சி மாவட்டம் லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஸ் சிவன் மீது புகார் அளித்துள்ளனர்.

அப்போது குஞ்சிதபாதம் கூறியதாவது: 

‘’ எனக்கு இதயத்தில் நான்கு அடைப்புகள் உள்ளன. இதற்கு சிகிச்சை பெற வேண்டும், இதுபற்றி லால்குடியில் வசிக்கும் என் அண்ணன் மாணிக்கத்திடம் உதவி கேட்டேன். அவர் தங்கள் சொத்தில்  வில்லங்கம் உள்ளதால் அதை விற்க முடியாத நிலையில் உள்ளதாக கூறினார்.  இந்த நிலையில்,  இந்த சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன், அவது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளதாக ‘’தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments