Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல - பிரகாஷ்ராஜ்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (12:15 IST)
கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பாஜகவினருக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தன்னுடையை டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.
 
பிரகாஷ்ராஜின் நண்பரும், பத்திரிக்கையாளருமான கவுரி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில்  நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கிரிஷ் கர்நாட் மற்றும் சில எழுத்தாளர்களை கொல்ல திட்டமிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில்  இதுகுறித்து பேசிய பிரகாஷ்ராஜ் இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவன் நான் அல்ல. இப்படி செய்யும்போது தான் எனது குரல் மேலும் வலிமையாக ஒலிக்கும். கோழைகளே இந்த வெறுப்பு அரசியலை விட்டு வெளியே வாருங்கள் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் செய்தால்…? - நடிகை கிரண் எச்சரிக்கை!

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments