Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதி விளையாடிவிட்டது… வடிவேலுவின் நாய்சேகர் தோல்வி பற்றி பேசிய நகைச்சுவை நடிகர்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (15:34 IST)
வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலம் ஆனவர் முத்துக்காளை.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களைக் கவரவில்லை. படம் பார்த்த ரசிகர்களை படம் பெரியளவில் திருப்திப் படுத்தவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இதனால் படம் தோல்விப் படமாக அமைந்தது. இதனால் வடிவேலு இனிமேல் கதாநாயகனாக நடிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தோல்வி பற்றி பேசியுள்ள நகைச்சுவை நடிகர் முத்துக் காளை “விதி விளையாடிவிட்டது. முன்பெல்லாம் வடிவேலு கூட நடிக்கும் நடிகர்கள், அவருக்காக நடித்தோம். இப்போது அவர் கூட இருப்பவர்கள் தங்களுக்காக நடிக்கிறார்கள். வடிவேலு எப்படி நடித்தாலும், அதை மக்கள் ரசிப்பார்கள் என்ற எண்ணம். இப்போது மக்கள் மாறிவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments