Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவிடம் அதிருப்தி தெரிவித்த மனோபாலா!

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (12:36 IST)
திருமணம் ஆனப் பிறகு ஜோதிகா படங்களில் நடிக்கவில்லையே என தான் பெரிதும் வருந்தியதாக நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 'துமாரி சுலு' என்ற படத்தை இயக்குனர் ராதா மோகன் தமிழில்  காற்றின் மொழி  என பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் ஜோதிகா கதை நாயகியாகவும், கதாநாயகியாகவும்  நடித்துள்ளார். விதார்த் அவரது கணவராக நடித்துள்ளார். தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு, சாந்த்ரா எமி உள்ளிட்டோர் முக்கிய  வேடத்தில் நடித்துள்ளார்கள். நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.
 
மொழி படத்தில் ஊமையாகவும், காது கேளாதவராகவும் நடித்து  நடித்த ஜோதிகா, இந்த படத்தில் வாயாடியாக, ரேடியோ ஜாக்கி வேத்தில் வேடத்தில் நடித்துள்ளார். குடும்பத்துடன் பார்த்து மகிழும் படி படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதால் காற்றின் மொழி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இப்படம் வருகின்ற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ராதா மோகன், ஜோதிகா மற்றும் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
 
அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா, ஜோதிகா திருமணம் ஆனப் பின்பு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதனால் தனது அதிருப்தியை சூர்யாவிடம் தெரிவித்தேன். ஜோதிகா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments