Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு நிதியாக பிரபல கதாசிரியர் கொடுத்த மிகப்பெரிய தொகை

Webdunia
திங்கள், 4 மே 2020 (19:42 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள், திரையுலகினர் ஆகியோர் கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பு நிதியாகவும், ஏழை எளியவர்களின் பசியை போக்க டன் கணக்கில் உணவு பொருட்களையும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். 
 
இந்தியாவிலும் அக்சயகுமார், ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சிரஞ்சீவி, அஜித், விஜய் உள்ளிட்ட பலதிரையுலக பிரபலங்கள் பெரும் தொகை மற்றும் உணவு பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தின் கதையை எழுதிய கதாசிரியர் இந்திய மதிப்பில் ரூ.9 கோடி கொரோனா தடுப்பு நிதியாக வழங்கியுள்லார்.
 
கொரோனா தடுப்பு நிதியாக பிரபல கதாசிரியர் கொடுத்த மிகப்பெரிய தொகை
உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் கொரோனாவால் தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து குணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments