Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா கதை என்னுடையது இல்லை! – கோபி நயினார் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:28 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா கதை தன்னுடையது அல்ல என இயக்குனர் கோபி நயினார் விளக்க அளித்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. 1980களில் நடப்பது போன்ற இந்த கதையானது குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பட்டா கதை அறம் பட இயக்குனருடையது என்று வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது.

இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள கோபி நயினார் “குத்துச்சண்டையை மையமாக கொண்டு ஆயிரம் படங்கள் எடுக்கலாம். சார்பட்டா திரைப்படம் எனது கதையல்ல” என கூறியுள்ளார்.

முன்னதாக பா.ரஞ்சித் தாராவியை மையமாக கொண்டு இயக்கிய காலா மற்றும் பழங்குடி தலைவரான பிர்சா முண்டா குறித்து எடுக்க திட்டமிட்ட திரைப்படமும் கோபி நயினார் திட்டமிட்டவைதான் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments