Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம் ஜி ஆர் பற்றி உருவாகும் அமீரின் திரைப்படம் – பாடலை வெளியிடும் தமிழக முதல்வர்!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (15:44 IST)
இயக்குனர் அமீர் நடிப்பில் வி இசட் துரை இயக்கியுள்ள நாற்காலி படத்தின் ஒரு பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய போஸடரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படமானது எம் ஜி ஆருக்கு மக்கள் மத்தியில் உள்ள புகழை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதை மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments