Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமீரின் நாற்காலி – படப்பிடிப்பு முடிவு!

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமீரின் நாற்காலி – படப்பிடிப்பு முடிவு!
, ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:57 IST)
இயக்குனர் அமீர் நடிப்பில் வி இசட் தொரை இயக்கியுள்ள நாற்காலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய போஸடரை வெளியிட்டுள்ளது படக்குழு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென டிரண்ட்டிங்கில் வந்த விருமாண்டி… பொங்கலுக்கு ரிலீஸ்!