Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷூக்கு ஏற்பட்ட திடீர் விபத்து: ரஜினி குடும்பத்தினர் அதிர்ச்சி

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (11:28 IST)
நடிகர் தனுஷ் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனுஷ் காயம் குறித்த தகவல் அறிந்தவுடன் ரஜினி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படம் 'மாரி 2'. இந்த படத்தில் நாயகன் தனுஷூம் வில்லன் டோவினோ தாமஸும் மோதும் காட்சியின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. இந்த சண்டைக்காட்சியின்போது எதிர்பாராதவிதமாக தனுஷூக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தனுஷை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தனுஷின் உடல் சிகிச்சைக்கு பின் தேறி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
தனுஷ் காயம் குறித்த தகவல் அறிந்து ரஜினி குடும்பத்தினர் தனுஷை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ரஜினி தற்போது டேராடூனில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. இருப்பினும் போன் மூலம் தனுஷ் உடல்நிலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது.
 
இன்னும் ஒருசில நாட்களில் தனுஷ் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்றும் அதன்பின்னர் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments