Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தாடி பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (10:53 IST)
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பிரபல தனியார் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்கள் மகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வதாக சமரசமாகினர். ஆனால் அதன் பிறகு கணவன்-மனைவி இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். 

இந்நிலையில் தனது கணவர் தாடி பாலாஜி குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்ததுடன் , செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த 20ஆம் தேதி மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் நித்யா பரபரப்பு புகார் அளித்தார்.
 
இந்த புகார் தொடர்பாக தாடி பாலாஜியிடம் நேற்று மாதவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தாடி பாலாஜி போலீசாரிடம் நான் எனது மனைவி நித்யாவை மிரட்டவில்லை. ஜன்னல்  உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜனவரி மாதம் நான் சென்னையில் இல்லை. வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தேன் என் மீது மனைவி பொய் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக என்னை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வருகிறேன் இவ்வாறு கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேன் இந்தியா சினிமா என்ற அசிங்கமான கலாச்சாரத்தால் நல்ல சினிமா குறைந்துள்ளது- செலவராகவன் ஆதங்கம்!

‘நல்ல படம் பறவை போல… கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்’- ஜப்பானில் ரிலீஸ் ஆகும் மாநாடு குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

அஜித் சார் இருக்கும் போது எதுக்கு டி ஏஜிங்.. இளமையான தோற்றம் குறித்து ஆதிக் பகிர்ந்த தகவல்!

தொடரும் ‘இட்லி கடை’ நட்பு.. அருண் விஜய்க்காக குரல் கொடுத்த தனுஷ்!

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

அடுத்த கட்டுரையில்
Show comments