திடீரென அனுஷ்கா ஷெட்டி எடுத்த முடிவு.. ரசிகர்களுக்கு கைப்பட எழுதிய கடிதம்..!

Mahendran
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (15:45 IST)
நடிகை அனுஷ்கா ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரது 'காட்டி' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான 'காட்டி' படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சில காலத்திற்கு சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். வெறுமனே ஸ்க்ரோல் செய்வதை நிறுத்திவிட்டு நிஜ உலகத்துடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன். விரைவில் உங்களை சந்திப்பேன். எப்போதும் புன்னகையுடன் இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அனுஷ்காவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் சிலர், இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். சிலர், அனுஷ்காவின் தனிப்பட்ட முடிவுக்கு மரியாதை அளிப்பதாகவும், அவர் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

சூர்யா 45, சூர்யா 46 இனிமேல் தான் ரிலீஸ்.. அதற்குள் சூர்யா 47 படப்பிடிப்பு தொடக்கம்..!

இளையராஜாவை தேடுனாங்க.. எங்கேயும் போகாத மனுஷன்.. எங்க போனாரு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments