Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களே இல்லாத ’பன்றிக்கு நன்றி சொல்லி’ … ஒன்லி ஆண்கள் – ஏன் இப்படி ?

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (17:21 IST)
பன்றிக்கு நன்றி சொல்லி

பன்றிக்கு நன்றி சொல்லி என்ற பெயரில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படத்தில் பெண்களே நடிக்கவில்லை என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புதையலைத் தேடி செல்லும் கௌபாய் வகைப் படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலம். தமிழில் அந்த வகைப் படங்களில் அதிகமாக நடித்தது ஜெய்சங்கர்தான். அதன் பின்னர் சிம்பு தேவன் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற கௌபாய் படத்தை இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படம் அந்த ஜானரில் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மற்றொரு முக்கியமான அம்சமாக படத்தில் பெண்களே நடிக்கவில்லை என்பதுதான். இதுகுறித்து கேட்டபோது கதைக்கு பெண்கள் தேவைப்படவில்லை என இயக்குனர் சொல்லியுள்ளார். புதையலை விட விலைமதிப்பற்ற பன்றி சிலை ஒன்றை தேடி செல்வோரின் பயணமே இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments