2வது இன்னிங்ஸில் சுதாரித்த மே.இ.தீவுகள்.. சதத்தை நெருங்கிய கேம்ப்பெல்.. ஹோப் அதிரடி ஆட்டம்..!

Siva
ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (18:40 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 248 ரன்களில் சுருண்ட நிலையில்  இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்து விளையாடுகிறது.
 
இன்றைய ஆட்ட நேரம் முடிவில் மேற்கிந்த தீவுகள் அணி 49 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பில் 87 ரன்கள் அடித்தும், சாய் ஹோப் 66 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதல் இன்னிங்சில் மளமள என விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், இரண்டாவது இன்னிங்சில் இன்னும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
 
இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் 97 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments