Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினேஷ் தகுதி நீக்கத்துக்குப் பின் சதி இருக்கிறது… விஜயேந்தர் சிங் குற்றச்சாட்டு!

vinoth
புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:53 IST)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ மல்யுத்த பிரிவில் விளையாடி வந்த அவர் இன்று காலை திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் பலரும் வினேஷுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லி வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான விஜயேந்தர் சிங் வினேஷின் தகுதி நீக்கத்துக்குப் பின் சதி உள்ளதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அவரது பேச்சில் “எங்களைப் போன்ற குத்துச்சண்டை வீரர்கள், ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடைக் குறைக்கமுடியும். 100 கிராம் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. பசியையும் தாகத்தையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியும். இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உருவாவதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments