Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் மேலும் இரண்டு அணிகள்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (18:03 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா பெரும் வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றபோது ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது
 
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் இருந்து தற்போது எட்டு அணியாக இருக்கும் ஐபிஎல் தொடர் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு பத்து அணியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று அணிகள் ஐபிஎல் போட்டியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இவற்றில் இரண்டு அணிகள் சேர்த்து கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் இருக்கும் நிலையில்  ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று இரண்டு அணிகள் இணையவுள்ளது. ராஞ்சி அணி உருவானால் அது தோனியின் சொந்த மாநில அணியாக இருந்தாலும் அவர் சென்னை அணிக்கே ஓய்வு பெறும்வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments