Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த மூன்று கேலரிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (21:54 IST)
சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த மூன்று கேலரிகள் திறப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 3 கேலரிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் இன்று கேலரிகள் திறக்கப்பட்டுள்ளது. 3 கேலரிகள் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது 3 கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புதுப்பித்தது. ஆனால் கேலரிகளை புதுப்பிக்க தங்களிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என சென்னை பெருநகரவளர்ச்சிக் குழுமம் குற்றம் சாட்டியதால் சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. 
 
இந்த பிரச்சனைக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக தீர்வு காணப்படாததால் சேப்பாக்கத்தில் உள்ள 3 கேலரிகளையும் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் ஐபிஎல் டி 20 தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் சமயங்களில் ரசிகர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது இருதரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து எட்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த மூன்று கேலரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த போட்டியில் அந்த மூன்று கேலரிகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments