Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (12:26 IST)
இதுவரை கிரிக்கெட் போட்டி போதுமான வெளிச்சம் இன்றி உள்பட ஒருசில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆனால் முதல்முறையாக பேட்ஸ்மேன் முகத்திற்கு நேராக சூரிய வெளிச்சம் பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 

இன்று நடைபெற்று வரும் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனையடுத்து 158 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட்ஸ்மேனின் முகத்திற்கு நேராக சூரிய ஒளி பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டி இன்னும் ஒருசில நிமிடங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வரலாற்றில் சூரிய ஒளியால் நிறுத்தப்பட்ட முதல் போட்டி இதுதான் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments