Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து வரலாற்றிலேயே இதுதான் அதிக கோல்! – சாதனை படைத்த ரொனால்டோ!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:07 IST)
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ நேற்றைய கால்பந்து போட்டியில் அடித்த ஹாட்ரிக் கோல் மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரரான இவர் க்ளப் ஆட்டங்களில் மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில காலமாக வேறு க்ளப்களுக்கு விளையாடியவர் மீண்டும் மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாம் ஹட்ஸ்பர் அணிக்கு எதிராக 3 கோல்களை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை வழங்கினார் ரொனால்டோ. நேற்று அவர் அடித்த கோல்களை சேர்த்து 805 கோல்களை அடித்துள்ளார். கால்பந்து போட்டி வரலாற்றில் ஒரே க்ளப் மற்றும் நாட்டிற்காக அதிகமான கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ எட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments