Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

ரெய்னா இல்லாதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது – சி எஸ் கே உரிமையாளர் கருத்து!

Advertiesment
Conflict
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:44 IST)
சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் விளையாடததால் சி எஸ் கே அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உரிமையாளர் என் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார்.

இதற்குக் காரணமாக இந்தியாவில் உள்ள அவரது மாமா ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமில்லை என சொல்லப்படுகிறது. ரெய்னாவுக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தோனிக்கு கொடுத்தது போன்ற  ஒரு அறையை ரெய்னா கேட்டதாகவும், நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காத‌தால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ரெய்னாவின் மீதான தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘ரெய்னா இல்லாதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் என்னிடம் உறுதியான கேப்டன் உள்ளார். தோனி எளிதில் குழப்பமடையமாட்டார். ரெய்னா என்ன இழந்துள்ளார் என்பதை விரைவில் உணர்வார்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு வந்ததால் பரவியதா கொரோனா? – முடங்கி கிடக்கும் சிஎஸ்கே வீரர்கள்!