Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசிப்பந்தில் துல்லிய யார்க்கர் – விக்கெட்டோடு விடைபெற்ற மலிங்கா !

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (14:26 IST)
சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மலிங்கா தனது கடைசிப் பந்தில் யார்க்கர் வீசி விக்கெட்டை வீழ்த்தினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் மலிங்கா. தனது ஏர்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை நடனமாட வைத்த இவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தோடு அண்மைக் காலமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட மலிங்கா இப்போது சர்வதேசப் போட்டிகள் அனைத்தில் இருந்தும் ஓய்வு பெற இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மலிங்கா வங்க தேச அணியுடனான தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடினார் மலிங்கா. இந்தப்போட்டியில் 9.4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் தனது கடைசி பந்தில் துல்லியமாக யார்க்கர் வீசி விக்கெட்டை வீழ்த்தி விடைபெற்றார். இதுவரை 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் இலங்கை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments